Monday, February 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

லங்கா சதோச நிறுவனத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த பொருட்கள்  இன்று (22) முதல் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 995 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 300 ரூபாயாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம்  சிவப்பு கௌப்பியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 765 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம்  நெத்திலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 940 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 830 ரூபாயாகும்.

பாஸ்மதி அரிசி கிலோ கிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 645 ரூபாயாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 230 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 288 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 240 ரூபாயாகும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular