Wednesday, January 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeSportsஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் உலக சாதனை!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உலக சாதனை!

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாகப் போட்டியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

அத்துடன் குறித்த மைதானத்தில் கழிவறை வசதிகள் கூட இல்லை என போட்டியைக் காணச் சென்றவர்களும் தெரிவித்துள்ளனர். 

2017 ஆம் ஆண்டு முதல் குறித்த மைதானத்தில் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular