இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல்!

28 views

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, நாட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

சோமாலிய மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்காக, Dhanusha Marine நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு விசேட திருப்புமுனையைக் குறிக்கிறது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.