எருக்கலம்பிட்டியில் இடம்பெற்ற அதிர்ச்சிகர சம்பவம்!

1,428 views

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எருக்கலம்பிட்டி 81 வீட்டுத்திட்டத்தில் குறித்த அதிர்ச்சிகர சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக ஒரு பிள்ளையின் தாயான அஸ்லா என்ற இளம் பெண்ணே இவ்வாறு தன்னைத்தானே மாய்த்துக்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உயிரிழந்த குறித்த பெண் தூக்கிட்டு விடயத்தில் பாரிய சந்தேகம் இருப்பதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த பெண்ணின் உடல் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை மன்னார் போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.