எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள்…

49 views

மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களில் வருமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

சுமார் 45 வறிய மாணவர்களுக்கான இக் கற்றல் உபகரணங்கள் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் ஓய்வுபெற்ற பெற்ற முன்னால் அதிபர் திருமதி தாஹிரா உம்மா கப்பாபிச்சை அவர்களால் வழங்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கும் இம் முயற்சிக்கு பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மி அவர்கள் நன்றி கூறியதுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் ஓய்வுபெற்ற அதிபர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.