சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனமொன்று போலி இலக்கத் தகட்டுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் பெலவத்தை-நாடாளுமன்ற சந்திக்கு அருகில் இந்த ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பத்துடன் தொடர்புடைய 52 வயதான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் மஹர தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அமைப்பாளராகவும், பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளவர் எனத் தெரியவந்துள்ளது.
