Wednesday, January 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகற்பிட்டியில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

கற்பிட்டியில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் 18 வயதையுடைய இளம் யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் வசிக்கும் குறித்த இளம் யுவதி வீட்டின் முன்புறத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இன்று (16) காலை அளவில் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உடனடியாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்களின் உதவியுடன் அறிவித்ததாக தந்தை தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம் நாசிம் வரவழைக்கப்பட்டு சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைக்காக சடலம் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular