Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாகவில்லுக்கு விஜயம் செய்த ரிஷாட் எம்.பி!

நாகவில்லுக்கு விஜயம் செய்த ரிஷாட் எம்.பி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் புத்தளம், நாகவில்லு பிரதேத்தில் பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்தில் 07 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுவரும் 3 மாடிக் கட்டிடத்திற்கான வேலைத்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் இன்று (29) நேரில் சென்று பார்வையிட்டார்.

தனது முயற்சியின் பயனாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த வகுப்பறைக் கட்டிட வேலைகளை துரித்தப்படுத்த தேவையான ஆலோசனைகளையும் வழங்கியதுடன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களையும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.ரீ.எம். தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ரிஜாஜ், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் நாசர் , பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் உள்ளிட்டவர்களுடன் பாடசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாகாவில்லு கிளை முக்கியஸ்தர்களும் இதன் போது கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular