Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபணிநீக்கம் செய்யப்பட்ட 62 மின்சார சபை பணியாளர்கள்!

பணிநீக்கம் செய்யப்பட்ட 62 மின்சார சபை பணியாளர்கள்!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் 62 பணியாளர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் விசேட பணிப்புரைக்கமைய அவர்கள் மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம், இலங்கை மின்சார சபையைத் தனியார் மயமாக்குவதற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

அதன்போது, மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக, குறித்த 62 பேரும் அப்போதைய மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரைக்கமைய இடைநிறுத்தப்பட்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular