கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மணியம்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல் வயலுக்கு போடப்பட்ட மின்குமிழ் வயர் அறுந்த நிலையில் குறித்த மின்சாரம் முதியவரை தாக்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் சுமார் 86 வயதுடைய முதியவர் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட செய்தியாளர் ஆனந்தன்