நேற்றிரவு கிளிநொச்சி A9 வீதி கனகாம்பிகைக்குளம் சிவன்கோயில் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் 56 வயதான முதியவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கார் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திரும்பும் சமயம் துவிச்சக்கரவண்டியில் சென்ற குறித்த முதியவர் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பாரதிபுரம் பகுதியைச்சேர்ந்த 56 வயதான முதியவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.