Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த பிராண்ட் அம்பாசிடர்கள்!

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த பிராண்ட் அம்பாசிடர்கள்!

உலகில் முதன்முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 100 பிராண்ட் அம்பாசிடர்கள் (brand ambassador) நியமிக்கபட்டார்கள்.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதன்முறையாக 100 சிறப்புப் பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதர்கள் (brand ambassador) குழுவொன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தன்னார்வ சேவைக்காக நியமிக்கபட்டது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த வைத்தியசாலையினால் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட குழு விசேட பயிற்சியின் பின்னர் வர்த்தக நாம தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“மூளை ஆரோக்கியத்திற்கான 10 தேவையான விஷயங்கள்” எனப்படும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான 10 முக்கிய விஷயங்களைப் பற்றி மக்களுக்குத் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பிராண்ட் தூதர்கள் பயன்படுத்த பட உள்ளனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமும் அதனுடன் இணைந்த வைத்தியசாலையும் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

எதிர்காலத்தில் “மூளை ஆரோக்கியத்திற்கான 10 தேவையான விஷயங்கள்” என்று அழைக்கப்படும் சுகாதார மேம்பாட்டு செயல்முறை ஆரோக்கியமான உணவு முறைகள், உடல் செயல்பாடு, ஒரு நல்ல குடிமகனாக இருப்பது மற்றும் நல்ல சமூக உறவுகளை உருவாக்குதல், உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவை நல்ல சரியான அளவில் வைத்திருத்தல், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், கொலஸ்ட்ரால் அளவை நல்ல சரியான அளவில் வைத்திருத்தல், இரத்த சர்க்கரை மேலாண்மை, இரத்த அழுத்த மேலாண்மை, நேர்மறை மன மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான தூக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மக்களைக் கல்வியூட்டுவதற்கும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சி மகத்தான செயல் என்றும், இதற்கு முன்னின்று செயற்படும் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த தன்னார்வ சேவையானது இந்த நாட்டில் சுகாதார சேவையில் ஒரு நல்ல மாற்றத்திற்கான ஆரம்பத்தை குறிக்கிறது என்றும் தெரிவித்தார். நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறான தன்னார்வ சேவைகள் மூலம் நோய்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் இந்நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்த முக்கியமான பணியை ஆதரிக்க அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும், நோய் தடுப்புக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உலக மக்கள்தொகையான 08 பில்லியனில் கிட்டத்தட்ட 04 பில்லியன் அதாவது 3.4 பில்லியன் பேர் தற்போது மூளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 400 மூளை நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மூளையின் முக்கிய நோய்கள் பக்கவாதம், டிமென்ஷியா, ஒற்றைத் தலைவலி என்பன அதில் அடங்குகின்றன.

மேலும், சர்க்கரை நோயினால் ஏற்படும் புற நரம்பு பாதிப்பு, மனித வாழ்வை அதிகம் பாதிக்கும் நோயாக கண்டறியப்பட்டு, மூளை நோய்கள் குறித்து முறையான விழிப்புணர்வு அளிப்பதன் மூலம், 90 சதவீதத்துக்கும் அதிகமான நோய்களை தடுக்க முடியும் என்பதும் தெரியவந்தது.

குளோபல் பேஷண்ட் அட்வகேசி கோலிஷன் (Global Patient Advocacy Coalition-GPAC) மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்கள் (Leading international organization) இந்த திட்டத்தில் பங்களிக்க தயாராக உள்ளன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்ட (ஓய்வு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, பேராசிரியர் திஸ்ஸ மற்றும் பேராசிரியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular