Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsரணிலுடன் கை கோர்த்த செய்னூலாப்தீன் எஹியா

ரணிலுடன் கை கோர்த்த செய்னூலாப்தீன் எஹியா

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினருமான செய்னூலாப்தீன் எஹியாகான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்துகொண்டார்.

நாட்டின் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், புத்தளம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஜனாதிபதியின் சிறப்பான எதிர்கால திட்டத்தின் மூலம் தீர்த்து வைக்கவும், புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கரங்களை பலப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தனது இணைவு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினருமான செய்னூலாப்தீன் எஹியாகான் இன்று கலந்துகொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலம் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வந்த இவர், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளமை புத்தளம் அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் MKM ஆதீர், புத்தளம் நகர சபை வேட்பாளர் NMM முயீன், மக்கள் விடுதலை முன்னனியின் மதுரங்குளி தொகுதி வேட்பாளர் H சஸ்மீர் ஆகியோர் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கரங்களை பலப்படுத்துவதோடு எமது நாட்டின் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்கு முழு மூச்சாய் செயற்படப் போவதாக இன்று கொழும்பில் கட்சி ஆதவாளர்களுடன் இணைந்து கொண்டதுடன் குறித்த செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நிமல் லான்சா அவர்களுடனான சந்திப்போன்றும் நீர்கொழும்பு Gold Dee Sans Hotel வளாகத்தில் பிரத்தியேக இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலிசப்ரி ரஹீம் அவர்களின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா, வடமேல் மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம் அமீன், கல்பிட்டி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முஷாம்மில் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular