Wednesday, March 26, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கிற்கு அடிக்கடி செல்லும் அரசாங்கம்!

வடக்கிற்கு அடிக்கடி செல்லும் அரசாங்கம்!

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வடக்குக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி, கிளிநொச்சிக்கும் விஜயம் மேற்கொண்டு ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு முதலில் சென்ற அமைச்சர், உப்பு உற்பத்தியின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், நவீன இயந்திரங்கள் கொண்டு அடுத்த மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள உப்பு உற்பத்தி செயற்பாட்டின் முன்னேற்றத்தினையும் பார்வையிட்டார்.

மேலும் உப்பு உற்பத்தி செய்யும் ஏனைய இடங்களையும் பார்வையிட்டார்.

அமைச்சருடன் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.சிறீபவாணந்தராஜா ஆகியோரும் தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர், கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலை பகுதிக்கு சென்ற அமைச்சர் மற்றும் குழாமினர் தொழிற்ச்சாலையின் மீள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular