Wednesday, January 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவிமான நிலையத்தில் சிக்கிய பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்

விமான நிலையத்தில் சிக்கிய பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 21 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால், இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறு பைக்கற்றுக்களாக பொதியிடப்பட்ட கஞ்சா உள்ளிட்ட சில போதைப்பொருட்கள், விமான நிலையத்தில் வைத்து நேற்று மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் இடம்பெறும் விருந்துபசாரங்களில் இதுபோன்ற போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து, டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்றைய தினம், விமானம் மூலம் பல பெருமளவான பொதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்தப் பொதிகளைக் கொண்டுசெல்வதற்காக, விமான நிலையத்தின் பொதிகள் பிரிவிற்கு மூன்று பேர் சென்றுள்ளனர்.

இதன்போது, சுமார் 33 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், புறக்கோட்டை பகுதியில் இருந்து மேலும் ஒரு தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular