Thursday, December 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅபாயத்துடன் பாலத்தை கடக்கும் வடக்கு மக்கள்!

அபாயத்துடன் பாலத்தை கடக்கும் வடக்கு மக்கள்!

அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்குனை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வருவதை அடுத்து தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பொக்குனை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்பொக்குனை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுத்துள்ளதுடன், இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

அபாயத்துடன் பாலத்தை கடக்கும் வடக்கு மக்கள்!

அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்குனை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வருவதை அடுத்து தற்பொழுது இராணுவத்தினர் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பொக்குனை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்பொக்குனை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுத்துள்ளதுடன், இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular