அமைதியான கிராமப்புறச் சூழலுக்குள் மறைந்திருந்த பாரிய போதைப்பொருள் வலைப்பின்னலை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று அதிரடியாக முறியடித்துள்ளனர்.
இன்று (29) காலை கணேமுல்ல, பொல்லதே பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது, எவரும் எதிர்பாராத வகையில் 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி பொலிஸாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (29) காலை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
ஒரு நடுத்தர வயதுப் பெண் இவ்வளவு பெரிய தொகையிலான போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைய தலைமுறையைச் சீரழிக்கும் இந்த “மெதுவான விஷம்” சமூகத்தின் அடிமட்டம் வரை ஊடுருவியிருப்பதை இச்சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
குறித்த பெண்ணை கைது செய்யும் போது, அவரிடமிருந்து 04 கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் மற்றும் 3450 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


