அமெரிக்காவில் புயல் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கென்டக்கியில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் உயிரிழப்புக்கு பலத்த மழை மற்றும் நீரில் மூழ்கிய சாலைகள் காரணம் ஆகும். 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் கூறியுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து, கென்டக்கி கவர்னர் பெஷியர் கூறியதாவது: வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்க வேண்டியுள்ளது. தாய் மற்றும் 7 வயது குழந்தை உட்பட பெரும்பாலான இறப்புகள் கார்கள் அதிக நீரில் சிக்கியதால் ஏற்பட்டது.
மக்கள் சாலைகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். புயல் தொடங்கியதிலிருந்து, மாநிலம் முழுவதும் 1,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் கடுமையான காற்று வீசுவதால் மின் தடைகள் அதிகரிக்கக்கூடும், என்றார்.
பெரும்பாலான பகுதிகளில் 15 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. நிறைய நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது என வானிலை ஆய்வாளர் பாப் ஓரவெக் தெரிவித்தார்.
