ஜூட் சமந்த
அம்பலாங்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று 2026.01.27 அன்று இரவு அம்பலாங்கொட, சுனாமிவத்தை பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்வின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கிருந்த நபர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர், சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் லேசபொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவராவார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இந்தத் தாக்குதலுக்கு பிஸ்டல் ரகத்தைச் சேர்ந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


