அல் ஜசீரா ஊடக நிறுவனம் நடத்தும் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக அவர் பதவியேற்றதன் பின்னர் நாட்டில் இருந்த கடுமையான பொருளாதாரத் திட்டம் இலங்கையை சரிவிலிருந்து காப்பாற்றியதா? அல்லது அது வரவிருக்கும் பெரிய துன்பத்திற்கு வழி வகுத்ததா? என்பதை பற்றிய முழுமையான கருத்துரைப்பும் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களின் போது பிரதமராக தனது அனுபவங்கள் குறித்தும் அவர் தனது கருத்துக்களை வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.