Saturday, June 14, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஆட்சியை கைப்பற்றிய SJB!

ஆட்சியை கைப்பற்றிய SJB!

அனுராதபுர மாவட்டத்தின் கெபித்திகொல்லேவ பிரதேச சபையில் பெரும்பான்மை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கிறது. 

இன்று (13) நடைபெற்ற தவிசாளர் தேர்வு வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்று இவ்வாறு ஆட்சியமைக்கிறது. 

இதன்போது, பெரும்பான்மை வாக்குகளை பெற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் வேட்பாளரான ரணசிங்க வனிகசேகரலாகே தர்மதாச கெபித்திகொல்லேவ பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கெபித்திகொல்லேவ பிரதேச சபையில் வெற்றியை பெற்றது தேசிய மக்கள் சக்தியாகும், ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற தவறியது. 

அந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 7 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும் வென்றன. 

மேலும், பொதுஜன பெரமுனவிற்கு 3 உறுப்பினர்களும், பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் சுயாதீன குழு  (எண் 1) தலா ஒரு உறுப்பினரையும் பெற்றன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular