ஆனையிரவு உப்பளத்தில் கடந்த 14.05.2025 ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் தம்மை ஒரு அடிமைகள் போல் நடாத்தப்பட்டு தமக்கு உப்பளத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்கப்படுவதில்லை எனவும் அங்கு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உப்பளத்தின் முகாமையாளருக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக தமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறான நடவடிக்கை தமது வாழ்வாதாரத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து இன்று 26.05.2025 வரை எந்த வித வேலையும் வழங்கப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வை தமக்கு வழங்குவார்கள் என எதிர்பார்த்துள்ளதாகவும், உரிய தீர்ப்பு கிடைக்கும் எதிர்பார்ப்புடன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடி எமக்கான உரிய தீர்வினை பெற்றுத்தந்து எம்மை வலமை போன்று பணியில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
