Tuesday, June 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsஇந்தியாவில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று!

இந்தியாவில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று!

இந்தியாவில் இதுவரை 6,491 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்து யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா முழுவதும் நேற்று 624 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாஸ்க் அணியும் படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular