கடந்த 09-02-2025 மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற நீதவான் இஸ்மத் ஜெமீல் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஒரு படகில் இருந்த 11 மீனவர்கள் மீது ஐந்து முக்கிய குற்றங்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
- அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
2. இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
3. இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11 மீனவர்களுக்கும் 50,000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டதுடன், இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
4. குறித்த 11மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாகவும் காணப்படுவதால், படகு ஓட்டிக்கு 6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவற்றை செலுத்த செலுத்த தவறும் பட்சத்தில் 06 மாத சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
5. படகு உள்ளிட்ட மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்படுவதாகவும் நீதிமன்ற நீதவான் இஸ்மத் ஜெமீல் அறிவித்தார்.
இதேவேளை மற்றோரு படகில் இருந்த 03 மீனவர்கள் மீதும் மூன்று குற்றங்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
- அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 03 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
- இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
- இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமை இதற்காக 03 மீனவர்களுக்கும் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், இதனை செலுத்த தவறும்பட்சத்தில் 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
குறித்த மூன்று இந்திய மீனவர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மாச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்