Saturday, July 19, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeTechnologyஇன்டெல் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

இன்டெல் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம், ஜூலையில் சுமார் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

கடுமையான சந்தைப் போட்டி, நிதி இழப்புகள் மற்றும் AI துறையில் பின்தங்கியது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கலிபோர்னியா, ஓரிகான், அரிசோனா மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பணிநீக்கங்கள் புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டானின் கீழ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.

2024 தொடக்கம் 15000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மேலும் 5000 பேர் பணிநீக்கம் செய்யப்படஉள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular