Tuesday, December 9, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

2025 டிசம்பர் 09 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு: காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

தீவில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது.

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

தீவின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை திணைக்களம் வேண்டியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

2025 டிசம்பர் 09 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு: காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

தீவில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது.

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

தீவின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை திணைக்களம் வேண்டியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular