Saturday, October 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கையில் அறிமுகமாகும் ரோபோடிக் அறுவை சிகிச்சை!

இலங்கையில் அறிமுகமாகும் ரோபோடிக் அறுவை சிகிச்சை!

தலவத்துகொடவில் ரூ.10 பில்லியன் செலவில் ஹேமாஸ் நிறுவனம் அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

நாட்டின் சுகாதார முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் ஹேமாஸ் நிறுவனம், நேற்று (03) தலவத்துகொடையில் தனது அதிநவீன, முழுமையான வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் நாட்டபட்டது.

சுமார் 900 சுகாதார நிபுணர்களைப் பணியமர்த்தவும், 150 நோயாளர்களுக்கான படுக்கை விரிபுபடுத்தவும் கொண்டதாக வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன அவசர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறப்பு மையங்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும், மேலும் அடிக்கல் நாட்டு விழா “சுகாதாரத்தின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அர்த்தம்” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹேமாஸ் மிக உயர்ந்த சுகாதாரப் பராமரிப்புக்கான முதலீட்டைச் செய்துள்ளதுடன் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப அதன் சேவைகளை விரிவுபடுத்தவும், தேசிய சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்

நாட்டில் முதலீடு செய்வதில் வணிக சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையை இது நிரூபிக்கிறது என்றும், இந்த மருத்துவமனை நாட்டில் முதல் முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்துதல், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம், இருதயவியல், நரம்பியல், இரைப்பை குடல், எலும்பியல் போன்ற சிகிச்சை பிரிவு வசதிகள் உள்ளிட்ட சிறப்புப் பராமரிப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதற்கான நீண்டகால அர்ப்பணிப்புக்காக ஹேமாஸ் குழுமம் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் திட்டமிடல் பிரிவு மற்றும் நிதி பிரிவுகளுக்கு தனது நன்றியைத் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துக் கொண்டார்.

ஹேமாஸ் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லக்கித் பீரிஸ் நிகழ்வில் உரையாற்றுகையில்; இலங்கையின் முதல் ரோபோடிக் அறுவை சிகிச்சை பயிற்சி மையத்தை நிறுவவும், இது அடுத்த தலைமுறை மருத்துவர்களின் அறுவை சிகிச்சை திறன்களை மேலும் மேம்படுத்த உதவுகிறது என தெரிவித்தார்.

ஹேமாஸ் குழுமத்தின் சுகாதாரப் பிரிவின் தலைவர் முர்தாசா யூசுப்மலி, இந்தத் திட்டம் ஹேமாஸ் மருத்துவமனைகள் வலையமைப்பின் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, மற்றும் நமது நாட்டை ஒரு வளர்ந்து வரும் பிராந்திய சுகாதார மையமாக நிலைநிறுத்துகிறது என்று கூறினார்.

இலங்கையில் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவாக்கப்பட்ட மருத்துவமனை வலையமைப்பு, துல்லியமான இதய சிகிச்சைக்கான அதிநவீன இருதய அறுவை சிகிச்சை, விரிவாக்கப்பட்ட இருதய பராமரிப்பு மற்றும் அவசர இருதய பராமரிப்பு வசதிகள், சிறுநீரகவியல் மற்றும் எலும்பியல் துறையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை, மற்றும் ஸ்கோலியோசிஸ் சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட விரிவான முதுகெலும்பு பராமரிப்பு, சிக்கலான தசைக்கூட்டு நிலைமைகள் மற்றும் பிரத்யேக எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவ அலகு, மற்றும் ரோபோ நுட்பங்களை உள்ளடக்கிய மேம்பட்ட சிறுநீரக மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல அதி நவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்நிகழ்வில் ஹேமாஸ் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லக்கித் பீரிஸ், ஹேமாஸ் குழும சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் தலைவர் முர்தாசா எசுஃபாலி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சந்திரா, இயக்குநர் பொது மேலாளர் டாக்டர் பிரதீப் எவர்ட், மூத்த பிரமுகர்கள், ஆலோசகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஹேமாஸ் குழும தலைமைத்துவக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

இலங்கையில் அறிமுகமாகும் ரோபோடிக் அறுவை சிகிச்சை!

தலவத்துகொடவில் ரூ.10 பில்லியன் செலவில் ஹேமாஸ் நிறுவனம் அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

நாட்டின் சுகாதார முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் ஹேமாஸ் நிறுவனம், நேற்று (03) தலவத்துகொடையில் தனது அதிநவீன, முழுமையான வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் நாட்டபட்டது.

சுமார் 900 சுகாதார நிபுணர்களைப் பணியமர்த்தவும், 150 நோயாளர்களுக்கான படுக்கை விரிபுபடுத்தவும் கொண்டதாக வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன அவசர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை பிரிவுகள் மற்றும் சிறப்பு மையங்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும், மேலும் அடிக்கல் நாட்டு விழா “சுகாதாரத்தின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அர்த்தம்” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹேமாஸ் மிக உயர்ந்த சுகாதாரப் பராமரிப்புக்கான முதலீட்டைச் செய்துள்ளதுடன் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப அதன் சேவைகளை விரிவுபடுத்தவும், தேசிய சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்

நாட்டில் முதலீடு செய்வதில் வணிக சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையை இது நிரூபிக்கிறது என்றும், இந்த மருத்துவமனை நாட்டில் முதல் முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்துதல், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம், இருதயவியல், நரம்பியல், இரைப்பை குடல், எலும்பியல் போன்ற சிகிச்சை பிரிவு வசதிகள் உள்ளிட்ட சிறப்புப் பராமரிப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதற்கான நீண்டகால அர்ப்பணிப்புக்காக ஹேமாஸ் குழுமம் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் திட்டமிடல் பிரிவு மற்றும் நிதி பிரிவுகளுக்கு தனது நன்றியைத் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துக் கொண்டார்.

ஹேமாஸ் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லக்கித் பீரிஸ் நிகழ்வில் உரையாற்றுகையில்; இலங்கையின் முதல் ரோபோடிக் அறுவை சிகிச்சை பயிற்சி மையத்தை நிறுவவும், இது அடுத்த தலைமுறை மருத்துவர்களின் அறுவை சிகிச்சை திறன்களை மேலும் மேம்படுத்த உதவுகிறது என தெரிவித்தார்.

ஹேமாஸ் குழுமத்தின் சுகாதாரப் பிரிவின் தலைவர் முர்தாசா யூசுப்மலி, இந்தத் திட்டம் ஹேமாஸ் மருத்துவமனைகள் வலையமைப்பின் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, மற்றும் நமது நாட்டை ஒரு வளர்ந்து வரும் பிராந்திய சுகாதார மையமாக நிலைநிறுத்துகிறது என்று கூறினார்.

இலங்கையில் சுகாதாரத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவாக்கப்பட்ட மருத்துவமனை வலையமைப்பு, துல்லியமான இதய சிகிச்சைக்கான அதிநவீன இருதய அறுவை சிகிச்சை, விரிவாக்கப்பட்ட இருதய பராமரிப்பு மற்றும் அவசர இருதய பராமரிப்பு வசதிகள், சிறுநீரகவியல் மற்றும் எலும்பியல் துறையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை, மற்றும் ஸ்கோலியோசிஸ் சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட விரிவான முதுகெலும்பு பராமரிப்பு, சிக்கலான தசைக்கூட்டு நிலைமைகள் மற்றும் பிரத்யேக எலும்பியல் மற்றும் விளையாட்டு மருத்துவ அலகு, மற்றும் ரோபோ நுட்பங்களை உள்ளடக்கிய மேம்பட்ட சிறுநீரக மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல அதி நவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்நிகழ்வில் ஹேமாஸ் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லக்கித் பீரிஸ், ஹேமாஸ் குழும சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் தலைவர் முர்தாசா எசுஃபாலி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சந்திரா, இயக்குநர் பொது மேலாளர் டாக்டர் பிரதீப் எவர்ட், மூத்த பிரமுகர்கள், ஆலோசகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஹேமாஸ் குழும தலைமைத்துவக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular