2025 ஆம் ஆண்டு கடற்படையினால் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, ரூ.75,000 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் 376 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்காக செயல்படுத்தப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கைக்கு சிறப்பு பங்களிப்பைச் செய்து வரும் இலங்கை கடற்படை, தீவின் கடலோரப் பகுதிகள் மற்றும் கடல் மண்டலங்களை உள்ளடக்கிய போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடல்சார் பங்குதாரர்கள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் கூட்டு அணுகுமுறையில் செயல்படுகிறது. இதன் கீழ், கடந்த 2025 ஆம் ஆண்டில் கடற்படை நடத்திய நடவடிக்கைகளின் விளைவாக, ரூ. 75,000 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள ஹெராயின், ஐஸ், ஹஷிஷ், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கஞ்சா, போதை மாத்திரைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் 376 உள்ளூர் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில், மொத்த தெரு மதிப்பு ரூ.25,206 மில்லியனுக்கும் அதிகமான 1,050 கிலோகிராமை விட அதிகமான ஹெராயினும், மொத்த தெரு மதிப்பு ரூ.47,725.00 மில்லியனுக்கும் அதிகமான 2,982 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) மற்றும் 169 சந்தேக நபர்களும் 11 உள்ளூர் படகுகள், கடற்படையால் கைப்பற்றப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
1,297 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள 5,768 கிலோகிராம்களுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சாவுடன் 73 உள்ளூர் சந்தேக நபர்களும் 19 உள்ளூர் படகுகளும், 19 மில்லியனுக்கும் அதிகமான மொத்த தெரு மதிப்புள்ள 257 கிலோகிராம்களுக்கும் அதிகமான உள்ளூர் கஞ்சாவுடன் 11 சந்தேக நபர்களும், 168 மில்லியனுக்கும் அதிகமான மொத்த தெரு மதிப்புள்ள 16,83,722 போதை மாத்திரைகளுடன் 16 சந்தேக நபர்கள் மற்றும் 04 உள்ளூர் படகுகளும், மொத்த தெரு மதிப்பு ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான 33 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஹஷிஷ் போதைப்பொருளுடன் ஏழு சந்தேக நபர்களும், 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மொத்த தெரு மதிப்புள்ள 42,038,5 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 36 சந்தேக நபர்களும் 03 உள்ளூர் படகுகளும், 470 மில்லியன் ரூபாய்க்கு மேல் மொத்த தெரு மதிப்புள்ள 67200 கிலோகிராம்களுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் 64 சந்தேக நபர்களும் 64 உள்ளூர் படகுகளையும் 2025 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின் போது போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் சிறப்பு பங்களிப்பைச் செய்வதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்காக செயல்படுத்தப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து பங்களிக்கும்.






