Sunday, July 6, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கை குறித்து நடிகர் சத்யராஜ் ஓபன் டோக்!

இலங்கை குறித்து நடிகர் சத்யராஜ் ஓபன் டோக்!

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல என்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. 

இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து என்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பதை அனைவரதும் ஆணித்தரமான கூறுகின்றனர். 

ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. 

மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் உடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை. 

அங்கு தாயினதும், சேயினதும், இளைஞர் – யுவதிகளதும் பெரியவர்களினதும் என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. சிறுவன் ஒருவன் புத்தகப்பையுடன் புதைக்கப்பட்டிருக்கின்றமை கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற செயல். 

இந்த நிலையில் குறித்த செயல்களை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும். 

இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

அதற்கு தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் நடிகர் சத்தியராஜ் தெரிவழத்துள்ளார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular