Tuesday, November 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கை பெண்களுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!

இலங்கை பெண்களுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புகையிரத திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, புகையிரத இயந்திர சாரதி, புகையிரத பாதுகாப்பு அதிகாரி மற்றும் புகையிரத நிலைய அதிகாரி ஆகிய பதவிகளுக்கு ஆண் அதிகாரிகள் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். மேற்பார்வை முகாமையாளர் பதவிக்கு 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மட்டுமே பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு நடைமுறையில் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய ஏற்பாடுகள் இல்லாததால், அரசியலமைப்பின் 55 உறுப்புரையின் (1) உப அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கொள்கையளவில் அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

இலங்கை பெண்களுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புகையிரத திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, புகையிரத இயந்திர சாரதி, புகையிரத பாதுகாப்பு அதிகாரி மற்றும் புகையிரத நிலைய அதிகாரி ஆகிய பதவிகளுக்கு ஆண் அதிகாரிகள் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். மேற்பார்வை முகாமையாளர் பதவிக்கு 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மட்டுமே பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு நடைமுறையில் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய ஏற்பாடுகள் இல்லாததால், அரசியலமைப்பின் 55 உறுப்புரையின் (1) உப அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கொள்கையளவில் அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular