பிரான்சிய கடற்படைக் கப்பலான ‘BEAUTEMPS BEAUPRE’ இன்று (2025 மே 09) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது,
இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Hydrographic vessel வகைக்கு சொந்தமான ‘BEAUTEMPS BEAUPRE’ என்ற கப்பலானது 80.65 மீற்றர் நீளமும், மொத்தம் 58 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் BERTHEAU Dimitri பணியாற்றுகிறார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ‘BEAUTEMPS BEAUPRE’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் குழுவினர்கள், தேசிய நீரியல் வரைபட அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்திய பின்னர், நீரியல் வரைபட சேவை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துறையாடவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் 2025 மே 13 ஆம் திகதி அன்று கப்பளானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளது.
