பூநகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் நேற்று 01.05.2025 மாலை ஆறு முப்பது மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்ளால் சரமாரியாக வாழ்வெட்டுக்கு இலக்காகி குறித்த இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கந்தசாமி பிரணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதபரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பூநகரி போலீசார் தெரிவித்துள்ளனர்.