காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள டிரோன் தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் பத்திரிகையாளர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைப் பிரிவுக்குமிடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு காஸாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அதனை ஏப்ரல் வரை நீட்டிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் மிலேச்சத்தனமாக காஸாவில் தாக்குதலை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று வருவது போர் நிறுத்த முயற்சியை அப்பட்டமாக மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.