Sunday, June 15, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldஇஸ்ரேல் விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

இஸ்ரேல் விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

ஊடக அறிக்கைகளின்படி, ஈரான் ஹைஃபா மற்றும் டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை வீசியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஈரான் முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளை குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது. இது தெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் ஆலை தாக்கியுள்ளதுடன் “ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய” இடங்களை குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாகவும், 800 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 20 குழந்தைகள் அடங்குவர்.

“ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் காசாவிலும் உள்ள பாலஸ்தீனியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் தங்குமிடங்கள் இல்லை, அவசர சேவைகள் இல்லை. அவர்கள் துண்டிக்கப்பட்டு பூட்டப்பட்ட நிலையில் உள்ளனர், மேலும் பொருட்கள் தீர்ந்து போகின்றன. எனவே ஈரானிய மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கு மட்டுமல்ல, இங்கு வேறு நிறைய ஆபத்து உள்ளதாக” ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காசாவில் உணவுக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ளது.

மேலும் ஈரானின் இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் ஆதரவு நிறுவனங்களைச் சுற்றி தற்போது வசிக்கும் அனைத்து மக்களும் உடனடியாக இந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை திரும்பி வரக்கூடாது” என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular