ஏகாதிபத்தியவாதிகளான அமெரிக்கா – இஸ்ரேல் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் மூலம் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி காமெய்னி அவர்களின் மறைவை முன்னிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் ஆகியோர் தமது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துள்ளனர்.
இன்று (05) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள தூதுவர் அலிடெர்ஷா டெல்கொஷ்வை சந்தித்து தனது அனுதாபத்தைத் பகிர்ந்துகொண்டதுடன், இரங்கல் பதிவேட்டிலும் தமது இரங்கல் செய்தியை பதிவு செய்தனர்.
இந்த விஜயத்தின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான அஷ்ரப் தாஹீர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது இரங்கலை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.





