Saturday, April 19, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஉடப்புவில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

உடப்புவில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

கடந்த 2025 ஏப்ரல் 13 ஆம் திகதி உடப்புவ, கருகப்பனே கடல் பகுதி மற்றும் அதனை அண்டிய கடலோரப் பகுதியிலும் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்த முயன்ற சுமார் 145 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டபோதே சட்டவிரோதமாக கடத்த முயன்றபோதே உலர்ந்த மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) நபர்கள் மற்றும் இரண்டு (02) மோட்டார் சைக்கிள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் 22 முதல் 52 வயதுக்குட்பட்ட பங்கதெனிய, வைக்கால மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆறு சந்தேக நபர்கள், உலர்ந்த மஞ்சள் பொட்டலம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular