Monday, March 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஉலகின் சுதந்திரத்திற்கான பாத யாத்திரை!

உலகின் சுதந்திரத்திற்கான பாத யாத்திரை!

உலகில் சுதந்திரம் அமைதி வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளை சேர்ந்த பெளத்த தேரர்கள் பாத யாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 07ம் திகதி ஆரம்பமான பாத யாத்திரை இன்று கிளிநொச்சியை வந்தடைந்ததுடன், வருகை தந்த தேரர்களை யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வரவேற்றனர்.

வீதியிலிருந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சரசவி விகாரை வரை மாணவர்கள், விரிவுரையாளர்கள் அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது.

தய்லாந்து, மியன்மார், இலங்கை, லாகோஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 50 வரையான தேரர்கள் குறித்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த பாத யாத்திரை நாளைய தினம் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular