Saturday, August 1, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஎரிபொருள் விலையில் மாற்றமா? வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி!

எரிபொருள் விலையில் மாற்றமா? வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி!

மாதத் இறுதி வந்தாலே இலங்கையில் வாகன உரிமையாளர்களும் பொதுமக்களும் முகம் கொடுக்கும் மிகப்பெரிய பதற்றம், “அடுத்த மாதம் எரிபொருள் விலை கூடுமா அல்லது குறையுமா?” என்பதுதான். அந்த வகையில், ஓகஸ்ட் மாதத்திற்கான மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று ஒரு முக்கிய தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் உலகச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் இந்த விலை திருத்தத்தின் கீழ், வரும் ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி. ராஜகருணா இன்று (31) ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தத் தீர்மானத்தின்படி, சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடரும். அதேபோல், போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறைக்கு மிக அவசியமான ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவே நீடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, ஏனைய பிரீமியம் ரக எரிபொருட்களின் விலைகளிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 495 ரூபாய்க்கும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்று 478 ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். அத்துடன் சமையல் மற்றும் ஏனைய பயன்பாடுகளுக்கான மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்று 285 ரூபாய் என்ற நிலையிலேயே மாற்றமின்றி நிலவுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

எரிபொருள் விலையில் மாற்றமா? வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி!

மாதத் இறுதி வந்தாலே இலங்கையில் வாகன உரிமையாளர்களும் பொதுமக்களும் முகம் கொடுக்கும் மிகப்பெரிய பதற்றம், “அடுத்த மாதம் எரிபொருள் விலை கூடுமா அல்லது குறையுமா?” என்பதுதான். அந்த வகையில், ஓகஸ்ட் மாதத்திற்கான மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று ஒரு முக்கிய தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் உலகச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் இந்த விலை திருத்தத்தின் கீழ், வரும் ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி. ராஜகருணா இன்று (31) ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தத் தீர்மானத்தின்படி, சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடரும். அதேபோல், போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறைக்கு மிக அவசியமான ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவே நீடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, ஏனைய பிரீமியம் ரக எரிபொருட்களின் விலைகளிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 495 ரூபாய்க்கும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்று 478 ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். அத்துடன் சமையல் மற்றும் ஏனைய பயன்பாடுகளுக்கான மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்று 285 ரூபாய் என்ற நிலையிலேயே மாற்றமின்றி நிலவுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular