பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நன்கொடைகள்
நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உதவிகளை ஏற்றி வருகை தந்த விமானம் இன்று (02) நாட்டை வந்தடைந்தது.
இந்த நன்கொடையில் உணவுப்பொருட்கள், கூடாரங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் பெருமளவில் அடங்குகின்றன.
இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ரஷீத் அலி அல் மஸ்ரூயி, வெளியுறவு அமைச்சகத்தின் (மத்திய கிழக்கு) பணிப்பாளர் சேவந்தி டி சில்வா, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுமேதா விஜேகோன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் தமிந்த ரம்புக்வெல்லா ஆகியோரின் பங்குபற்றலுடன் நிவாரண பொருட்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாதுகாப்புப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்கள் இந்த நன்கொடையில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு





