இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு பதவிகளிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை அக்கட்சி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு பதவிகளிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை அக்கட்சி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) மீளமைப்புக் குழுவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் 2026 ஏப்ரல் 29 அன்று அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், எரான் விக்கிரமரத்னவினால் 2026.04.29 அன்று வழங்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை கட்சியின் முகாமைத்துவக் குழு மற்றும் செயற்குழு ஆகியன ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விளையாட்டு சங்கங்களும் அரசியல் தலையீடுகளற்ற சுயாதீனமான நிர்வாகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், அரசியல்வாதிகள் அவற்றில் பதவிகளை வகிக்கக் கூடாது என்பதுமே கட்சியின் உறுதியான கொள்கையாகும் என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கட்சியின் இந்தக் கொள்கைக்கு முரணாக அமையாத வகையில், எரான் விக்கிரமரத்ன தார்மீக ரீதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடுகளைத் தவிர்ப்பதற்கான கட்சியின் கொள்கையினைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தின் மூலம் அறியமுடிகிறது.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாற்றியமைப்புக் குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



