வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் 35வது ஆண்டு நினைவு நாள்
கனடா வாழ் வட புல முஸ்லீம் மக்களால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில்
தமிழர்கள், முஸ்லிம்கள், தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள், கனடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு கனடா, டொரெண்டோவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த இனச்சுத்திகரிப்பு என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத துன்பவியல் நிகழ்வு என்றும், காலம் கடந்தாலும் இம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




