கற்பிட்டி பிரதேச சபை மற்றும் ஜெர்மனியின் பெர்லின் பிரதேச சபை ஒப்பந்தம் கைச்சாத்து
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச சபை மற்றும் ஜெர்மனியின் பெர்லின் பிரதேச சபை என்பவற்றுக்கிடையிலான நான்கு (2025-2029) வருட கால அபிவிருத்தி திட்டத்திற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கற்பிட்டி பிரதேசத்தை நிலைத்துறை வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் பசுமை சுற்றுலா மேம்பாடு ஆகிய துறைகளில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எஸ்.எம் றிகாஸ், உப தலைவர் சமன் குமார் ஹேரத் மற்றும் பெர்லின் பிரதேச சபையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
இது கற்பிட்டி மக்களின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கமாகும் என கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





