சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கை கடற்படையினர், நேற்று (2025 ஜூன் 04) கல்பிட்டி ஆலங்குடா கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அறுநூறு சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கல்பிட்டி ஆலங்குடா கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவுடன் இணைக்கப்பட்ட புலனாய்வு பணிக்குழு நடத்திய இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, ஒரு டிங்கி படகில் 17 சந்தேகத்திற்கிடமான பைகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகளுடன் டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.