Saturday, July 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்பிட்டியில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

கல்பிட்டியில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

கற்பிட்டி, வத்தலங்குண்டு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கடற்படையின் நடவடிக்கைகளினால் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்ட தொண்ணூற்றொன்று (91) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி (ஈரமான எடை) மற்றும் இருநூற்று முப்பத்தெட்டு (238) ஜோடி காலணிகள் கடற்படையினரால் 2025 ஜூலை 03 அன்று கைப்பற்றப்பட்டன.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, கற்பிட்டி, வத்தலங்குண்டு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படை தலைமையகத்தால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் இருந்த ஐந்து (05) சந்தேகத்திற்கிடமான பொதிகள் சோதனை செய்யப்பட்டன. கடற்படையினரால் மேற்கொள்ளபடும் நடவடிக்கையினால், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போது கடத்தல்காரர்களால் குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட தொண்ணூற்று ஒரு (91) கிலோகிராம் (ஈரமான எடை) உலர்ந்த இஞ்சி மற்றும் இருநூற்று முப்பத்தெட்டு (238) ஜோடி காலணிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular