சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை வில்லைகளை கல்பிட்டி பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொஹத்துவாரம் கடற் கரையோரத்தில் கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்களால் 26.06.2025 ஆந் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 317000 (04 பார்சலில்) போதை வில்லைகள் கைப்பற்றபட்டுள்ளது.
தீவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள கடற்படையினரின் நடவடிக்கையினால் குறித்த போதை மாத்திரை பொதி கைவிடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதுடன் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக கல்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.