Friday, July 18, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்பிட்டியில் சிக்கிய 13 லட்சம் போதை மாத்திரைகள்!

கல்பிட்டியில் சிக்கிய 13 லட்சம் போதை மாத்திரைகள்!

கடந்த 2025 ஜூலை 14 ஆம் திகதி கல்பிட்டி வெல்லமுண்டலம் கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் முந்நூற்று நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று நாற்பது (1,349,640) போதை மாத்திரைகளை ஏற்றிச் சென்ற மூன்று டிங்கி படகுகளுடன் ஐந்து (05) சந்தேக நபர்கள் கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்.

கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உச்சமுனை கடற்படை பிரிவின் சிறப்பு கப்பல் படை ரோந்து குழுவினரால் கல்பிட்டி, வெல்லமுண்டலம் கடல் பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்படி கடல் பகுதியில் பயணித்த மூன்று (03) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் கண்காணிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

குறிப்பிட்ட டிங்கி படகிற்குள் பதினெட்டு (18) பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒபோதை மாத்திரைகளுடன் இவ்வாறு ஐந்து (05) சந்தேக நபர்களும் மூன்று (03) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்பிட்டி, மோத்துவாரம், குரக்கன்ஹேன, வன்னிமுண்டலம் மற்றும் சின்னக்குடுரிப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள், போதை மாத்திரைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் துறையின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular