Monday, March 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்பிட்டியில் சிக்கிய 160,000 கடத்தல் சிகரெட்டுகள்!

கல்பிட்டியில் சிக்கிய 160,000 கடத்தல் சிகரெட்டுகள்!

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகள் கல்பிட்டிய கடற்படையினரால் பறிமுதல்!

கல்பிட்டி இப்பனதீவு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், குறித்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த டிங்கி படகொன்றில் இருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுப்பதற்காகவும் கடற்படையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினருக்கு கிடைத்த தகவல்களின்படி, உச்சமுனை கடற்படை முகாமின் விசேட கப்பல் படையணி குழுவொன்றை அனுப்பி இப்பனதீவிற்கு அப்பால் உள்ள கடற் பகுதியில் மற்றும் குறித்த கடற்கரைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இப்பனதீவு கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று (01) அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அங்கு, குறித்த டிங்கி படகிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்படையின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கரைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இருந்த குறித்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகளை இவ்வாறு இப்பனதீவு கடற்கரையில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மேலும், கடற்படையினரால் மீற்க்கப்பட்ட டிங்கி படகு, சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular