ஜூட் சம்மந்த
கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் கிராம அலுவலர்கள் மற்றும் பொருளாதார அலுவலர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பில் இருந்து விலகி, இடைநிறுத்தப்பட்டிருந்த “தித்வா” பேரிடர் நிவாரண கொடுப்பனவை மீண்டும் வழங்க தொடங்கியுள்ளனர்.
அனர்த்த உதவி விநியோகத்தின் போது ஏற்பட்ட தொடர்ச்சியான அழுத்தம் மற்றும் தடைகள் காரணமாக, கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் அனைத்து கிராம அலுவலர்களும் கடந்த 20 ஆம் தேதி நடவடிக்கைகளில் இருந்து விலகினர். கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் பொருளாதார மேம்பாட்டு அலுவலர்களும் அனர்த்த உதவி விநியோகத்தை ஆதரிப்பதில் இருந்து விலக நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் கிராம அலுவலர்கள் மற்றும் பொருளாதார அலுவலர்கள், கல்பிட்டி – வன்னிமுந்தலம மற்றும் ஆலங்குடா பகுதிகளில் தங்கள் கடமைகள் தடைபடுவதாக கடந்த 19 ஆம் தேதி கல்பிட்டி பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.
கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் இருப்பதுடன், 22 கிராம அலுவலர்கள் மட்டுமே சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கல்பிட்டி பிரதேச செயலகத்தில் 25,324 குடும்பங்கள் சமீபத்திய பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14,824 குடும்பங்கள் ரூ.25,000 ரூபா பேரிடர் உதவியைப் பெற தகுதி பெற்றிருந்தன. இதற்காக அரசாங்கம் ரூ.370.60 மில்லியன் ஒதுக்கியுள்ளது. 20 ஆம் தேதி நிலவரப்படி, ரூ.210 மில்லியன் பேரிடர் உதவியாக விநியோகிக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட செயலாளருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவர்கள் பேரிடர் உதவியை விநியோகிக்க ஒப்புக்கொண்டனர், மீதமுள்ள ரூ.160 மில்லியனை அடுத்த சில நாட்களில் செலுத்தி முடிப்பார்கள் என்று கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


