நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலைய உள்ளக வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தின் உள்ளக வீதிக்கான காபட் இடும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கற்பிட்டி பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டில் சுமார் 47,20,000 ரூபா செலவில் இந்த வீதி புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்களின் நீண்டகாலத் தேவைகளை உணர்ந்து, முறையான திட்டமிடலுடன் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகள் வரிசையில் இவ் வேலைத்திட்டம் இடம்பெறுவதுடன் மக்களின் வரிப்பணத்தை முறையான நிர்வாகத்தின் ஊடாக மக்களுக்கே பயனுள்ள வகையில் மாற்றியமைப்பதில் அரசு என்றும் உறுதியாக இருப்பதை இது உணர்த்துகிறது.
கற்பிட்டி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையம் 2001 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதும் கடந்த 25 வருடங்களாக உள்ளக வீதிகள் எவ்வித புனரமைப்பும் செய்யப்படாது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




