Monday, June 8, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்பிட்டி பொலிஸில் அதிரடி மாற்றம்!

கல்பிட்டி பொலிஸில் அதிரடி மாற்றம்!

ஜூட் சமந்த

பொறுப்பதிகாரியைத் தவிர அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் – பின்னணியில் ரகசிய அரசியல் சந்திப்பா?

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொறுப்பதிகாரியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், 24 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 15 அதிகாரிகள் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் புத்தளம் பொலிஸ் பிரிவின் கீழ் இயங்கும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அவர்களுக்கு பதிலாக புத்தளம் பிரிவின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 35 அதிகாரிகள் உடனடியாக கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனுடன், நுரைச்சோலை (நொரொச்சோலை) பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய எட்டு அதிகாரிகளும் புத்தளம் பொலிஸ் பிரிவின் பிற நிலையங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடமாற்றங்கள் அனைத்தும், அரச சேவை ஆணைக்குழுவினால் 2022 டிசம்பர் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 2310/29 இலக்க நடைமுறை விதிமுறைத் தொகுப்பின் 258(1)ஆம் பிரிவின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 15ஆம் திகதி சிலாபம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தலைமையில் புத்தளம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர், பொலிஸ்மா அதிபர் மற்றும் புத்தளம் மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் இடையே இரகசிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கலந்துரையாடலின் போது, கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் பல்வேறு சட்டவிரோத வர்த்தக வலையமைப்புகளுடன் தொடர்பு பேணி, ஊழல் முறையில் கடமையாற்றுவதாக ஒரு பிராந்திய அரசியல்வாதி குற்றஞ்சாட்டியதாக அறியப்படுகிறது.

இதன் காரணமாகவே கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்த பாரிய அளவிலான இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பொலிஸ் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த திடீர் மற்றும் விரிவான இடமாற்றம், புத்தளம் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து பொதுமக்களும் அரசியல் வட்டாரங்களும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

கல்பிட்டி பொலிஸில் அதிரடி மாற்றம்!

ஜூட் சமந்த

பொறுப்பதிகாரியைத் தவிர அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் – பின்னணியில் ரகசிய அரசியல் சந்திப்பா?

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொறுப்பதிகாரியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், 24 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 15 அதிகாரிகள் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் புத்தளம் பொலிஸ் பிரிவின் கீழ் இயங்கும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அவர்களுக்கு பதிலாக புத்தளம் பிரிவின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 35 அதிகாரிகள் உடனடியாக கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனுடன், நுரைச்சோலை (நொரொச்சோலை) பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய எட்டு அதிகாரிகளும் புத்தளம் பொலிஸ் பிரிவின் பிற நிலையங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடமாற்றங்கள் அனைத்தும், அரச சேவை ஆணைக்குழுவினால் 2022 டிசம்பர் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 2310/29 இலக்க நடைமுறை விதிமுறைத் தொகுப்பின் 258(1)ஆம் பிரிவின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 15ஆம் திகதி சிலாபம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தலைமையில் புத்தளம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர், பொலிஸ்மா அதிபர் மற்றும் புத்தளம் மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் இடையே இரகசிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கலந்துரையாடலின் போது, கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் பல்வேறு சட்டவிரோத வர்த்தக வலையமைப்புகளுடன் தொடர்பு பேணி, ஊழல் முறையில் கடமையாற்றுவதாக ஒரு பிராந்திய அரசியல்வாதி குற்றஞ்சாட்டியதாக அறியப்படுகிறது.

இதன் காரணமாகவே கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்த பாரிய அளவிலான இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பொலிஸ் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த திடீர் மற்றும் விரிவான இடமாற்றம், புத்தளம் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து பொதுமக்களும் அரசியல் வட்டாரங்களும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular